கடற்பகுதியில் 600 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!
In இலங்கை January 4, 2021 8:49 am GMT 0 Comments 1353 by : Jeyachandran Vithushan

நீர்கொழும்பு கடற்பகுதியில் ஆழ் கடல் மீன்பிடிப் படகொன்றில் இருந்து பாரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த ஆழ் கடல் மீன்பிடிப் படகிலிருந்து 100 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 80 கிலோ கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சுமார் 600 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என கடற்படை அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.