கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று
In இலங்கை January 13, 2021 3:02 am GMT 0 Comments 1343 by : Dhackshala

நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று பிற்பகல் 02 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள பிரேரணைகள் மற்றும் சபை ஒத்திவைப்பு வேளை விவாதங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால், அது குறித்து எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பிரகாரம் 31 நாடாளுமன்ற உறுப்பினர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.