News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • மத்திய வங்கியின் வடக்கிற்கான அபிவிருத்தி அறிக்கை – மங்கள விளக்கம்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. கட்சி பேதமின்றி மக்களுக்காக கடமையாற்றுவது அரசியல்வாதிகளினது கடமையாகும் :ஜனாதிபதி

கட்சி பேதமின்றி மக்களுக்காக கடமையாற்றுவது அரசியல்வாதிகளினது கடமையாகும் :ஜனாதிபதி

In இலங்கை     March 26, 2018 2:17 pm GMT     0 Comments     1444     by : poovannan

கட்சி ரீதியாக பிரிந்து தேர்தலில் போட்டியிட்டபோதும் வெற்றியின் பின்னர் மக்கள் சேவையை நிறைவேற்றுகின்ற போது அரசியல் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) முற்பகல் பொலன்னறுவை ரோயல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “தெரிவு செய்யப்பட்டவர்கள் தமது பொறுப்புக்களை மக்களுக்காக உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் சிறந்த அரசியல் கலாசாரத்திற்கான ஒழுக்கப் பண்பாடுகளுடன் புதிய உறுப்பினர்கள் செயற்பட வேண்டும்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 40 வீதத்திற்கு அதிகமாக பெற்றுக்கொள்ள முடியவில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளுடன் ஒப்பிடுகின்ற போது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாது.

இந்த பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எதிர்காலத்தில் தெளிவான வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கட்சித் தலைவர் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

தமன்கடுவ நகர சபை, தமன்கடுவ பிரதேச சபை, திம்புலாகலை பிரதேச சபை, வெலிகந்த பிரதேச சபை, ஹிங்குராங்கொடை பிரதேச சபை, லங்காபுர பிரதேச சபை, மெதிரிகிரிய பிரதேச சபை மற்றும் எலஹர பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இதன்போது பதவிப்பிரமாணம் செய்தனர்.

பிரதேச அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களுக்கு ‘மகாத்மா காந்தி’ என்ற நூலும் நெல்சன் மண்டேலாவின் சுயசரிதை தொடர்பான நூலும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பொலிஸ் துறையில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி  

    பொலிஸ் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னற

  • அரசியலமைப்பை மீறி பிரதமர் செயற்பட முற்படுவதாக குற்றச்சாட்டு  

    பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியை போன்று அரசியலமைப்பை மீறி செயற்பட முற்படுவதாக மக்கள் விடுதலை மு

  • புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பில் சத்தியப்பிரமாண நிகழ்வுகள்  

    மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய ஆண்டில், அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கடமைக்கான சத்தியப்பிரமாணம் செய்யும

  • கிரிதலேயில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த காட்டு யானை உயிரிழப்பு  

    பொலன்னறுவை, கிரிதலே பகுதியில் வேட்டைக்காரொருவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த காட்

  • கவனயீர்ப்பு போராட்டத்துடன் பொலனறுவையில் தேசிய மீனவர் தினம்  

    இருபத்து இண்டாவது சர்வதேச மீனவர் தினத்தின் தேசிய நிகழ்வுகள், ஒன்பது மாகாண மீனவ அமைப்புகளின் பங்கேற்ப


#Tags

  • Maithri Pala Sirisena
  • Oaths
  • polannaruwa
  • சத்தியப்பிரமாணம்
  • பொலன்னறுவை
  • மைத்திரிபாலசிறிசேன
    பிந்திய செய்திகள்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
    பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.