கட்டுப்பாடுகளை தளர்த்துவது வைரஸ் மீண்டும் முழு பலத்துடன் திரும்புவதற்கு வழிவகுக்கும்: WHO

கட்டுப்பாடுகளை துரித கதியில் தளர்த்துவது, கொரோனா வைரஸ் மீண்டும் முழு பலத்துடன் திரும்புவதற்கு வழிவகுத்து விடும் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் கூறுகையில், “தொடர்ந்து மூன்றாவது வாரமாக புதிய கொரோனா பாதிப்புகள் சர்வதேச அளவில் குறைவாக பதிவாகி வருகிறது. சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும் உலகளாவிய அளவில் பார்க்கும் போது ஊக்கபடுத்தும் வகையிலான செய்திகளை காண முடிகிறது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை இது காட்டுகிறது. உருமாறிய கொரோனா பரவினாலும் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என நமக்கு கடந்த 3 வார எண்ணிக்கை பரிந்துரைக்கிறது” என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.