News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!
  • மோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. கண்டி சம்பவம் போன்று அளுத்கம பின்னணியையும் ஆராய வேண்டும்: அசாத்சாலி

கண்டி சம்பவம் போன்று அளுத்கம பின்னணியையும் ஆராய வேண்டும்: அசாத்சாலி

In இலங்கை     March 13, 2018 11:07 am GMT     0 Comments     1828     by : Risha

ண்டி வன்முறை சம்பவத்தை போன்று அளுத்கம- கிந்தோட்டை கலவரங்கள் குறித்து ஆராய்ந்து அவற்றின் பின்னணியை கண்டறிய ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், ”ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நகர சபைக்கு 23 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 23 பேர்களில் ஒருவரேனும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் இல்லை.

இவை அனைத்தையும் வைத்து நோக்கும்போது கண்டி, அம்பாறை சம்பவங்கள் குறித்து புரிந்துக் கொள்ளக் கூடியதாகவிருக்கும். இவைதான் ராஜபக்ஷேக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அளுத்கம கலவரம் இடம்பெற்றபோது, அதனை அக்காலத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முன்னெடுத்ததாக ராஜபக்ஷேக்கள் குற்றம் சாட்டினர்.

எனவே, கண்டி சம்பவத்தை ஆராய மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதை போன்று, அளுத்கம- கிந்தோட்டை வன்முறைகள் குறித்து ஆராயவும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு பின்னணியில் செயற்பட்டவர்களை கண்டறிற்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை, கண்டி சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக பிரதமர் அறிவித்துள்ளார். அளுத்கம கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் வழங்கப்பட்டது. அத்தொகை தற்போது எவ்வாறு குறைந்தது என எனக்கு தெரியாது.

அளுத்கம கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க முடியுமாயின், கண்டி சம்பவத்தில் உயிரிழந்தவர்களது குடும்பங்களுக்கும் அதே தொகை கட்டாயமாக வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அதுமாத்திரமின்றி மக்களது வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடுகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இனவாதிகளின் கருத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பை உருவாக்க முடியாது: அமைச்சர் ரவி  

    இனவாதிகளின் கருத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பை உருவாக்க முடியாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பி

  • போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கிடைக்கும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு நிறுத்தப்பட ​வேண்டும்!- அசாத் சாலி  

    நாட்டில் தற்போது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும்

  • ஐ.தே.க.அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடாது: தலதா அதுகோரள  

    ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், எக்காரணம் கொண்டும் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடாது என நீதி மற்றும் சிற

  • மஹிந்தவின் ஆதரவுடன் அரசியலமைப்பை கொண்டுவருவது அவசியம்! – அசாத் சாலி  

    எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரின் ஆதரவுடனேயே புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண

  • ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் – அசாத் சாலி  

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் என, மேல்மாகா


#Tags

  • Assad Sally
  • commissions
  • Kandy Violence
  • National Unity Front
  • அசாத் சாலி
  • ஆணைக்குழுக்கள்
  • கண்டி வன்முறை
  • தேசிய ஐக்கிய முன்னணி
    பிந்திய செய்திகள்
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
    ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.