கனடாவில் அவசரகால நிலை பிரகடனம்: ஒட்டாவா மேயர் அறிவிப்பு

மத்திய கனடாவில் அதிகரித்துள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் ஒட்டாவாவின் மேயர் நேற்று (வியாழக்கிழமை) இந்த பிரகடனத்தை வெளியிட்டுள்ளார். இதேவேளை, நீர்மின் அணையொன்று உடைப்பெடுக்கும் ஆபத்து காணப்படுவதாக கியூபெக் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேரில் ஆய்வு செய்துள்ளார். காலநிலை மாற்றத்தின் விளைவாக இவ்வாறான மோசமான வானிலையை தொடர்ந்தும் எதிர்கொள்ள நேரிடும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளப்பெருக்கினால் இதுவரை ஒருவர் உயிரிழந்ததுடன், 900இற்கும் அதிகமானோர் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அரச இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.