கனடாவில் கடும் பனிப்புயல் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தெற்கு ஒன்ராறியோவில் ரொறன்ரோவின் பல்வேறு இடங்களிலும் கடும் பனிப்புயல் வீசி வருகின்றது.
இதன்காரணைமாக அப்பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
15 தொடக்கம் 25 சென்ரி மீற்றர் வரையான கடும் பனிப்பொழிவுடன் கூடிய காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.