கொலை சந்தேகநபரை கைது செய்ய பிடியாணை!
In கனடா September 19, 2018 11:19 am GMT 0 Comments 1571 by : Farwin Hanaa

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் தெற்கு பகுதியிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேங்க் ஸ்ரீட்டில் அமைந்துள்ள வோல்கீ வீதியிலுள்ள விடுதியொன்றிலிருந்து கடந்த சனிக்கிழமை 30 வயதுடைய மொஹமர் மொனா என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலையைச் மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய கிறிஸ்டல் பஸ்டின், கொலை செய்யும் நோக்கத்துடன் குறித்த கொலையை மேற்கொண்டதற்கான ஆதாரங்களைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்கான பிடியாணையைக் கொண்டு அந்நகரப் பொலிஸார் அவரை தேடிவருகின்றனர்.
குறித்த பொலிஸாரால் தேடப்பட்டுவரும் பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு கனேடிய பொலிஸார், ஊடகங்களிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.