கனடா – இலங்கை முதலீட்டாளர்களின் சுற்றுலாத்தள வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு
In இலங்கை May 2, 2019 4:48 am GMT 0 Comments 2477 by : Dhackshala
கனடா – இலங்கை முதலீட்டாளர்களின் கூட்டில் முல்லைத்தீவு சிலாவத்தை தெற்கு தியோநகர் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சுற்றுலாத்தள வளாகத்தில் ஆயுதங்கள் மற்றும் ஒருதொகுதி உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் நேற்று (புதன்கிழமை) படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது தொலைபேசி சிம், கத்தி, தொலைநோக்கி கருவி, தொலைத்தொடர்பு கருவிகள், சப்பாத்து, சீருடை என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மீட்கப்பட்ட பொருட்கள் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக படையினரும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.