News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு
  • வடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு
  • கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
  • மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
  • பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி!

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி!

In இந்தியா     November 7, 2018 3:51 am GMT     0 Comments     1413     by : Najee

கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஒரு தொகுதியை மட்டும் பா.ஜனதா தக்கவைத்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி நடை பெற்ற இடைத்தேர்தலை முன்னிட்டு ஆளும் காங்கிரஸ் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 2 நாடாளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஒரு நாடாளுமன்ற தொகுதியை மட்டும் பா.ஜனதா தக்க வைத்ததுள்ளது. இதன் மூலம் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்து உள்ளது.

மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் சிவராமகவுடா, 3 லட்சத்து 24 ஆயிரத்து 943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 2 லட்சத்து 43 ஆயிரத்து 161 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் பா.ஜனதா வேட்பாளரும், முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய்.ராகவேந்திரா, 47 ஆயிரத்து 388 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

ராமநகர் சட்டமன்ற தொகுதியில், ஜனதா தளம்( எஸ்) வேட்பாளரும், முதல் மந்திரி குமாரசாமியின் மனைவியுமான அனிதா 1 லட்சத்து 9 ஆயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஜமகண்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.நியமகவுடா 39 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இடைத்தேர்தல் வெற்றியை காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்( எஸ்) தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா போன்ற 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையிலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற நிலையிலும் கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சியினருக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் இந்த வெற்றியைப் பதிவு செய்யும் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கடு.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மேகதாது விவகாரம்: கர்நாடக அரசுக்கு எதிராக  தமிழக அரசு மனு தாக்கல்  

    மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் பொய்யெ

  • மேகதாதுவில் அணை கட்ட அனுமதியளிக்கப்படவில்லை – மத்திய அரசு  

    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று இன்று (சனிக்கிழமை) உச்சநீத

  • சிறந்த வழக்கறிஞராக வரவேண்டும் என்பதே இலட்சியம்: சாகவச்சேரி இந்துக் கல்லூரி மாணவி  

    எதிர்காலத்தில் சிறந்த வழக்கறிஞராக வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாண

  • தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை!  

    ஆசியக் கிரிக்கெட் சம்மேளனம் (ACC) வளர்ந்து வரும் வீரர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கும் ஆசியக் கிண்ண ஒ

  • மேகதாது விவகாரம்: ஆளுனர்- பிரதமருக்கிடையில் இன்று சந்திப்பு!  

    கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ள நிலையில்,  தமிழக ஆளுனர் பன்வ


#Tags

  • 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி
  • 5 தொகுதி
  • இடைத்தேர்தலில்
  • கர்நாடக
  • வெற்றி
    பிந்திய செய்திகள்
  • பரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு
    பரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு
  • கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
    கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
  • மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
    மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
  • பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை!
    பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை!
  • டுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு
    டுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு
  • இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்!
    இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்!
  • பாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்
    பாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்
  • பிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்
    பிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்
  • ரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்
    ரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • பாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு
    பாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.