News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. ஏனையவை
  3. கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கைது: மக்கள் கொந்தளிப்பு

கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கைது: மக்கள் கொந்தளிப்பு

In ஏனையவை     March 26, 2018 4:03 am GMT     0 Comments     1687     by : Suganthini

ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்ட கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் Carles Puigdemont), ஜேர்மன் நீதிபதி முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பின்லாந்துக்குச் சென்ற கார்லெஸ் புகிடமொன்ட், அங்கிருந்து டென்மார்க்குக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், டென்மார்க்கிலிருந்து பெல்ஜியத்துக்குச் செல்லும் வழியில் ஜேர்மனியில் அவர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக, அவரது பேச்சாளர் ஜோன் மரியா பீக்கெய் (Joan Maria Pique) தெரிவித்துள்ளார்.

ஸ்பெய்ன் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய பிடியாணை உத்தரவையடுத்து, ஜேர்மனியின் வட. மாநிலமான ஷெல்ஸ்விக் – ஹோல்ஸ்டைன்  (Schleswig-Holstein) பகுதியில் கார்லெஸ் புகிடமொன்டைக் கைதுசெய்ததாக ஜேர்மன் பொலிஸார் கூறியுள்ளனர்.

இருப்பினும், இவர் ஜேர்மனியிலிருந்து உடனடியாக நாடு கடத்தப்படுவாரா என்பது தொடர்பாக தெளிவாகத் தெரியவில்லை.

ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரிய கற்றலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு, கடந்த ஒக்டோபரில் நடத்தப்பட்டபோது, இதற்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. இதனையடுத்து, கற்றலோனியாவுக்கான சுதந்திரப் பிரகடனத்தை கார்லெஸ் புகிடமொன்ட் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டை சுமத்திய ஸ்பெய்ன் அரசாங்கம், அவரை கைதுசெய்வதற்கும் உத்தரவிட்டது. இதற்கிடையில், அவர் பெல்ஜியத்துக்கு தப்பிச்சென்ற நிலையில், கடந்த 4 மாதங்களாக அங்கு தங்கியிருந்துள்ளார்.

இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர் 25 வருடகால சிறைத்தண்டனையை எதிர்நோக்க நேரிடுமென, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து கற்றலோனியாவில் பதற்றமான நிலைமை காணப்படுவதுடன், அங்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சுமார் 50 பேர் காயங்களுக்குள்ளாகியதுடன், 3 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

பொதுமக்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து தொலைக்காட்சிச் சேவையொன்றில் தோன்றி உரையாற்றிய கற்றலோனியச் சபாநாயகர் ரோஜர் டொரண்ட், இறையாண்மை மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாக்க முன்வருமாறு கற்றலோனியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், அமைதியைப் பேணுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வியட்நாம் பிரஜைகள் ஐவர் கட்டுநாயக்கவில் கைது!  

    வியட்நாம் பிரஜைகள் ஐவர் இன்று (புதன்கிழமை) பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர

  • ஐ.நா. தீர்மானத்தை செயற்படுத்த மீண்டும் கால அவகாசத்திற்கு இலங்கை திட்டம்!  

    ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில

  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது  

    யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட, கோப்பாய் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்

  • உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் காலமானார்  

    உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான Karl Lagerfeld தனது 85வது வயதில் இன்று(செவ்வாய்கிழமை) காலமானார்.

  • சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!  

    இந்த வருடத்தின் மிகப்பெரிய சூப்பர் மூன் இன்று (செவ்வாய்கிழமை) பௌர்ணமி இரவில் நிகழவுள்ளது. சாதாரண நாட


#Tags

  • arrest
  • Carles Puigdemont
  • Catalonia
  • Germany
  • கற்றலோனியா
  • கார்லெஸ் புகிடமொன்ட்
  • கைது
  • ஜேர்மனி
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.