காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு நிர்ப்பந்தித்தனர் – அமேதி தொகுதி பெண் வேட்பாளர்!
In இந்தியா May 6, 2019 7:53 am GMT 0 Comments 1957 by : Krushnamoorthy Dushanthini

தன் கையை பிடித்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என நிர்ப்பந்தித்ததாக அமேதி தொகுதியில் வாக்களித்த பெண் வேட்பாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தான் பா.ஜ.கவிற்கு வாக்களிக்க விரும்பியதாக தெரிவித்த குறித்த பெண் தன் கையை பிடித்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு சிலர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பத்துடன் தொடர்புடைய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ காட்சியினை அமேதி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரான ஸ்மிருதி இராணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், தேர்தல் ஆணையம் இது குறித்து நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக பதிவிட்டுள்ளார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக இடம்பெறவுள்ள நிலையில் இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.