காத்தான்குடி தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் நீடிப்பு!

காத்தான்குடி பொலிஸ் பிரவில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் சட்டம், எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 31ஆம் திகதி அமுலுக்கு வந்த காத்தான்குடி பிரதேச தனிமைப்படுத்தல் சட்டம், நாளை 15ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.
எனினும், எதிர்வரும் 18ஆம் திகதியே குறித்த தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம் தொடர்பாக முடிவு செய்யப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தினமும் 100 முதல் 150 பேருக்கு இப்பரிசோதனைகள் நடைபெறுவதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.