காவலாளிதான் திருடன் என்பதை அறியும் காலம் நெருங்கியது: ராகுல்
In இந்தியா April 23, 2019 2:24 am GMT 0 Comments 2101 by : Yuganthini

நாட்டில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் ஆகியன நிறைவுபெற்ற பின்னர் காவலாளிதான் திருடன் என்பது உறுதிப்படுத்தப்படுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அமேதியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ராகுல் காந்தி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“பிரதமர் நரேந்திர மோடி நேர்மையானவராக இருந்தால், ரபேல் ஒப்பந்தத்தில் இடம்பெற்ற ஊழல் குறித்து விவாதிக்க அஞ்ச தேவையில்லை.
அந்தவகையில் மோடி 15 நிமிடம் மாத்திரம் விவாதிக்க முன்வருவாரானால் காவலாளியின் உண்மையாக முகத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவேன்.
இதேவேளை மோடி குறித்து தகவல் வெளியிட்டால் தண்டனை பெற வேண்டுமென்ற பயத்தில் உள்ளீர்கள். ஆகையால் நீங்கள் அவ்வாரே இருங்கள்.
ஆனாலும், இந்த தேர்தலில் மோடியின் ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி. பின்னர் நாம் ஆட்சிபூடம் ஏறியதும் உங்களது ஆசைகளை நிறைவேற்றி தருவோம்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.