கிளிநொச்சியில் கைக்குண்டு மீட்பு – பொலிஸார் விசாரணை
In இலங்கை May 1, 2019 7:42 am GMT 0 Comments 2361 by : Dhackshala
கிளிநொச்சி உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் உள்ள பாலத்திற்கருகில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டு குண்டுசெயலிழக்கும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வெடிபொருளொன்று காணப்படுவதாக இன்று (புதன்கிழமை) காலை கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குண்டை பாதுகாப்பாக அகற்றி செயலிழக்கச்செய்துள்ளனர்.
குறித்த குண்டு இறுதி யுத்தத்தின்போது கைவிடப்பட்ட குண்டாக இருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.