கிளிநொச்சியில் கைதான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சியில் நேற்றைய தினம் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போதே அவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.