UPDATE சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் – உரிமையாளர் அதிரடியாக கைது!
In ஆசிரியர் தெரிவு May 5, 2019 10:05 am GMT 0 Comments 2912 by : Dhackshala
கிளிநொச்சி மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி கோவில் அருகே நிறுத்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் இலக்கதகடற்ற மோட்டார் சைக்கிளொன்று காணப்படவே அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும் கைது செய்யப்பட்டவர் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்
கிளிநொச்சி மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி கோயிலை அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இலக்கதகடற்ற மோட்டார் சைக்கிளொன்றினால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த பகுதியிலிருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.