கிளிநொச்சியில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு
In இலங்கை December 26, 2020 5:40 am GMT 0 Comments 1352 by : Yuganthini
கிளிநொச்சியில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில், மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இன்று (சனிக்கிழமை) காலை 9.20 மணியளவில், மாவட்ட அரசாங்க அதிபரால் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
இதன்போது சுனாமி பேரலையால் உயிரிழந்த மக்களிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்கள், இடர் முகாமைத்துவ நிலைய ஊழியர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.