கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து இராணுவச்சீருடை மீட்பு (2ஆம் இணைப்பு)
In இலங்கை April 28, 2019 7:42 am GMT 0 Comments 3115 by : Dhackshala
கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸாரும் இரானுவத்தினரும் இணைந்து சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்டபோது இராணுவச்சீருடை மற்றும் கைத்தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்கள் தருமபுரம் பொலிஸ்நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்பு
கிளிநொச்சி – தருமபுரம் உழவனுார் பகுதியிலுள்ள முஸ்லிம் வீடொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த வீட்டில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.