கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!
In இலங்கை February 12, 2021 9:31 am GMT 0 Comments 1320 by : Vithushagan
கிளிநொச்சி ஏ-9 வீதியின் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏ-9 வீதிவழியாக பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கப்ரக வகனம் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.