கிழக்கு மாகாணத்தில் உள்ள 32 பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு !
In இலங்கை January 11, 2021 9:56 am GMT 0 Comments 1958 by : Jeyachandran Vithushan

கிழக்கு மாகாணத்தில் உள்ள 32 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
காத்தான்குடி பகுதியில் 25 பாடசாலைகளும், கல்முனையில் 5 பாடசாலைகளும், திருகோவில் பகுதியில் ஒரு பாடசாலையும், அம்பாறை பகுதியில் ஒரு பாடசாலையும் மூடப்படுகின்றது.
ஆளுநர், மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர்களுன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.