குஜராத்தில் பாரிய தீ விபத்து
In இந்தியா December 20, 2020 10:34 am GMT 0 Comments 1551 by : Dhackshala

குஜராத்தில் பழைய பொருற்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட தீ பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
வல்சாத் மாவட்டம் வாபி பகுதியில் இருக்கும் பழைய பொருற்கள் குடோனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை திடீரென தீ விபத்து நேரிட்டது.
அதன் பின்னர் அந்தத் தீ மளமளவென அருகிலுள்ள பிற குடோன்களுக்கும் வேகமாக பரவியது.
இதனையடுத்து வழங்கப்பட்ட தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.