குடியரசு தின அணிவகுப்பை இரத்து செய்யுமாறு கோரிக்கை!
In இந்தியா January 6, 2021 8:24 am GMT 0 Comments 1324 by : Krushnamoorthy Dushanthini

குடியரசு தின அணிவகுப்பை இரத்து செய்ய வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை, மோடி அரசு இரத்து செய்ய வேண்டும். அணிவகுப்பில் கலந்துகொள்பவர்களுக்கு இது நியாயமானதாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின், 71வது குடியரசு தினம், வரும், 26ம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கலந்துகொள்ள இருந்த நிலையில், அவரின் இந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் அதி வீரியம் மிக்க கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகின்ற நிலையில் மேற்படி பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.