குடியேற்ற நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை நாடியுள்ள கிரேக்கம்
தீவு முகாம்களில் உள்ள ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளை இடமாற்ற கூடுதல் நிதி மற்றும் ஆளணி ஆதரவை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை கிரேக்கம் கோரியுள்ளது.
கிரேக்கத்திற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான புதிய குடியேற்ற ஒப்பந்தம் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிரேக்க குடியேற்ற அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐந்து கிரேக்க தீவுகளில் சுமார் 18 ஆயிரம் குடியேற்றவாசிகள் காணப்படுகின்றனர். அதிக நெருக்கடிமிக்க வடக்கு ஏஜியன் தீவில் சன நெரிசலை குறைக்கும் முயற்சியாக 6 ஆயிரத்து 500 குடியேற்றவாசிகளும், அகதிகளும் மெயின்லண்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
குடியேற்றவாசிகளை திருப்பியனுப்பும் செயற்பாட்டில் கிரேக்கம் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது எனத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மாத்திரம் 58 ஆயிரத்து 645 பேர் கிரேக்கத்தில் புகலிடம் கோரியுள்ளதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.