குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக சர்வமத பிரார்த்தனை
In Uncategorized May 2, 2019 1:33 pm GMT 0 Comments 1907 by : Litharsan
தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் சர்வமதப் பிரார்த்தனை இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காகவும், நாட்டில் சமாதான சூழ்நிலை ஏற்பட வேண்டியும் மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று மாலை இந்த சர்வமதப் பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் குறித்த சர்வமத பிரார்த்தனை இடம் பெற்றது.
இதன்போது சர்வமத தலைவர்கள் கலந்துகொண்டு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், இந்நாட்டில் மீண்டும் சமாதான சூழ்நிலை ஏற்படவும் சர்வமதப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
ஒரு நிமிடம் மௌன அஞ்சலியின் பின்னர் தீபம் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சர்வமத பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இதன்போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.