குருவாயூர் கோயிலில் ஒரேநாளில் அதிக ஜோடிகளுக்கு திருமணம்

குருவாயூர் கோயிலில் நேற்று 207 ஜோடிகளுக்கு ஒரேநாளில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக அங்கு அதிகமான கூட்டம் காணப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகேவுள்ள குருவாயூர் கோயிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிக திருமணம் நடைபெற்றுள்ளது.
தை மாத வளர்பிறையில் வரும் கடைசி முகூர்த்தம் என்பதால் அங்கு அதிக ஜோடிகளுக்கு ஒரேநாளில் திருமணம் நடைபெற்றுள்ளது.
அதேபோன்று நேற்று ஒரே நாளில் 851 குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.
கேரளா மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் குருவாயூர் கோயிலுக்கு வருகைதந்து திருமணம் செய்வது, குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுவது போன்றவற்றில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவருகின்றர்.
மேலும், அங்கு திருமணம் செய்வது, குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுதல் போன்ற சிகழ்வுகள் மிகவும் சிறப்பு பெற்றதாக கருதப்படுகின்றது. இதனால் குருவாயூர் கோயிலில் இந்நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.