குரேஷியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் ஒரு இலட்சத்து ஆயிரத்து 838பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 56ஆவது நாடாக விளங்கும் குரேஷியாவில், இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 612பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 712பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 919பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 57பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆயிரத்து 62பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 260பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து ஆயிரத்து 838பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.