News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
  • டெல்லியை சென்றடைந்தார் சவுதி இளவரசர்
  • இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
  • ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
  • இம்ரான் கான் பேச்சு அர்த்தமற்றது – இந்திய வெளியுறவுத்துறை பதிலடி
  1. முகப்பு
  2. இலங்கை
  3. குளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு!

குளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு!

In இலங்கை     April 22, 2018 4:41 pm GMT     0 Comments     1503     by : Ravivarman

வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள மலசலகூடத்திற்கான குழி குளத்தினுள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஆதிவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர்.

வவுனியா, ஆதிவிநாயகர் கோயில் வைரவபுளியங்குளம் குளத்தின் அருகில் அமையப்பெற்ற ஒரு கோவிலாகும். இந்த கோவிலில் கடந்த சில மாதங்களிற்கு முன் ஆலய உற்சவ காலங்களில் கோவிலில் தங்கும் குருக்களிற்காக மலசலகூடம் ஒன்று அமைக்கப்பட்டது.

குறிப்பாக இந்த மலசலகூடவசதிகள் ஆலய எல்லைக்குள்ளாகவே அமைக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்ட மலசலகூடத்திற்குரிய குழி வைரவபுளியங்குளம் குளத்திற்குள் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பபட்டன.

இதனால் வைரவபுளியங்குளத்து நீர் மாசடைவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால், கழிவுகள் குளத்திற்குள் விடப்படுவதாக தெரிவித்து கோயில் நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அமைக்கப்பட்ட மலசலகூடமும் அதனோடு இணைந்த குழியும் கோயில் எல்லைக்குள்ளாகவே கட்டப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதேவேளை இன்று வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு சென்று இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், ‘கோயிலினுள் அமைக்கப்பட்ட கட்டடத்திற்கு சமாந்தரமாகவே கோயில் காணிக்குள் கட்டப்பட்டிருக்கிறது. சுகாதார முறையில் மலசல கூட குழி அமைப்பதாயின் சீமெந்தினால் கட்டி பூசியிருந்தல் பக்றீரியாக்கள் வெளியே செல்லாது.

அவ்வாறு இவ் மலசலகூடம் கட்டப்பட்டிருந்தால் இக்கழிவுநீர் வெளியே செல்வதற்கான சந்தர்ப்பம் எதுவும் இல்லை. இவ்வாறான விடயங்களை ஆராயாமல் இவ்வாறான குற்றச்சாட்டை பொது நிறுவனம் ஒன்றின் மீது சுமத்தியிருப்பதாகதான் பார்க்க கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் சுகாதாரப்பகுதி உரிய முறையில் கையாள வேண்டும்’ என தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வவுனியா ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த பிரதமர் பணிப்பு  

    வவுனியா ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்த

  • வன்னிப் பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்: சத்தியலிங்கம் கோரிக்கை  

    வவுனியாவில் இயங்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக் கழகமாக தரமுயர்த்து

  • எம்மோடு இணைந்து பணியாற்றக்கூடியவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் – ப.சத்தியலிங்கம்  

    தேவைகள் நிறைந்த எமது பகுதி மக்களின் நிலமையை கருத்திற் கொண்டு எம்மோடு இணைந்து பணியாற்றக்கூடியவர்களை அ

  • வவுனியா கல்லுமலை ஆலய வளாகத்தில் விகாரை அமைக்க முயற்சி: பிரதேசத்தில் குழப்பநிலை!  

    வவுனியா கல்லுமலை ஆலய வளாகத்தில் பௌத்த வழிபாட்டுத் தலம் அமைக்கும் முயற்சியால் அப்பிரதேசத்தில் குழப்பந

  • அரசியலமைப்பை நம்பி பலனில்லை: தமிழர் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும் – சத்தியலிங்கம்  

    இன்றைய அரசியல் நிலையைப் பார்க்கையில் அரசியலமைப்பை நம்பி பலனில்லை எனத்தோன்றுவதாக முன்னாள் மாகாணசபை உற


#Tags

  • P.sathyalingam
  • ஆதிவிநாயகர் கோயில்
  • கழிவுநீர்
  • ப. சத்தியலிங்கம்
  • வைரவபுளியங்குளம்
    பிந்திய செய்திகள்
  • பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
    பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
  • இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
    இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
  • ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
    ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
  • ஹெய்டியிலிருந்து Montreal திரும்பியுள்ள தாதியர்கள்!
    ஹெய்டியிலிருந்து Montreal திரும்பியுள்ள தாதியர்கள்!
  • பிரித்தானியா பிரெக்ஸிற்றை தாமதப்படுத்தும்: முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவர்
    பிரித்தானியா பிரெக்ஸிற்றை தாமதப்படுத்தும்: முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவர்
  • உலக புகழ்பெற்ற ஜேர்மனிய ஆடை வடிவமைப்பாளர் உயிரிழப்பு
    உலக புகழ்பெற்ற ஜேர்மனிய ஆடை வடிவமைப்பாளர் உயிரிழப்பு
  • மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை
    மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை
  • 2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி!
    2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி!
  • இணையத்தை ஆக்கிரமித்துள்ள கனடாவின் பனி நிறைந்த ஒளிப்படங்களின் தொகுப்பு!
    இணையத்தை ஆக்கிரமித்துள்ள கனடாவின் பனி நிறைந்த ஒளிப்படங்களின் தொகுப்பு!
  • ஐரோப்பிய ஆணையத் தலைவர் – தெரேசா மே நாளை சந்திப்பு!
    ஐரோப்பிய ஆணையத் தலைவர் – தெரேசா மே நாளை சந்திப்பு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.