கூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ – செல்வம் அடைக்கலநாதன் கருத்து
In இலங்கை January 16, 2021 4:38 am GMT 0 Comments 2656 by : Jeyachandran Vithushan
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது என அறிய முடிகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனீவா விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவே முடிவெடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகின.
அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்குக் கடிதத்தின் மூலம் ரெலோ அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்த அறிக்கைகள் குறித்து அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் தொடர்பு கொண்டு ஆதவன் செய்தி சேவை வினவியது.
இதற்கு பதிலளித்த அவர், இவ்வாறு வெளியாகிய செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.