கெய்ல் அதிரடி: டெல்லிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு

நடைபெற்றுவரும் 12ஆவது ஐ.பி.எல். தொடரின் 37ஆவது போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
டெல்லியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் பஞ்சாப் அணி 164 ஓட்டங்களை டெல்லி அணியின் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவுசெய்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணி சார்பாக, அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய கிரிஸ் கெய்ல் 37 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் மன்தீப் சிங் 30 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில், சன்டீப் லமிச்ஹானே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ரபாடா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் டெல்லி அணி 164 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.