கொங்கோவில் எபோலா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது

கொங்கோ குடியரசில் எபோலா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொங்கோவில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் எபோலா தொற்று பரவி வருகின்ற நிலையில், கொங்கோ வரலாற்றில் இரண்டாவது தடவையாக பதிவாகியுள்ள அதிகூடிய உயிரிழப்பு வீதமாக இது காணப்படுகிறது.
எபோலா தொற்று நாட்டின் கிழக்கு பகுதிகளில் பரவி வருகின்றது. இந்நிலையில், நாட்டின் வன்முறை காரணமாக தொற்றை கட்டுப்படுத்துவது சவாலாக காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மருத்துவ நிலையங்கள் மற்றும் ஊழியர்கள் மீது 119 தாக்குதல்கள் அரங்கேற்ற்றப்பட்டுள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இதுவரை சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் எபோலா தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.