கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்தது
In இலங்கை November 29, 2020 9:28 am GMT 0 Comments 1361 by : Dhackshala

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 2 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 346 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியேறிய நிலையில் இந்த அதிகரிப்பு ஏறபட்டுள்ளது.
நாட்டில் இதுவரையில் 22 ஆயிரத்து 988 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 109 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.