கொரோனா அச்சம் – மேலும் 195 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
In இலங்கை December 28, 2020 8:54 am GMT 0 Comments 1554 by : Dhackshala
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த 195 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.
அதனடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 150 பேரும் இந்தியாவில் இருந்து 18 பேரும் கட்டாரில் இருந்து 16 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் மாலைத்தீவில் இருந்து 5 பேரும் பாகிஸ்தானில் இருந்து நான்கு பேரும் சௌதி அரேபியாவில் இருந்து இருவரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
நாட்டை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.