கொரோனா அச்சம் – மேலும் 289 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
In இலங்கை February 3, 2021 3:47 am GMT 0 Comments 1452 by : Dhackshala

கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கான அரசாங்கத்தின் சிறப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதன்படி தொழில்வாய்ப்புக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கை வரமுடியாது தவித்த 289 இலங்கையர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் இருந்து இன்று அதிகாலை 5.20 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நாட்டை வந்தடைந்த இவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காகவும் இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.