கொரோனா அச்சம் – மேலும் 297 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
In இலங்கை December 2, 2020 3:31 am GMT 0 Comments 1425 by : Dhackshala

தொழில் வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று கொரோனா பரவல் காரணமாக அங்கு சிக்கித் தவித்த மேலும் 297 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி டுபாயிலிருந்து 162 பேரும் மாலைதீவிலிருந்து 44 பேரும் கட்டாரிலிருந்து 21 பேரும் இந்தியாவின் மும்பையிலிருந்து 70 பேரும் இன்று அதிகாலை காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்தில் பல்வேறு தனியார் வைத்தியசாலையின் ஊழியர்களினால் பி.சி.ஆர்.சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை தொழில்வாய்ப்புக்காக பல்வேறு நாடுகளை நோக்கி இன்றைய தினம் நாட்டிலிருந்து 425 இலங்கையர்கள் புறப்பட்டவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.