கொரோனா அச்சம் – மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்
In இலங்கை November 30, 2020 4:15 am GMT 0 Comments 1364 by : Dhackshala

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 349 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்களும் கட்டாரின் தோஹாவிலிருந்து 21 பேரும் ஜப்பானின் நரிட்டோவிலிருந்து 53 பேரும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளுக்கும் தனியார் வைத்தியசாலைசாலையின் ஊழியர்களினால் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.