கொரோனா அச்சம் – வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்
In இலங்கை December 21, 2020 4:58 am GMT 0 Comments 1513 by : Dhackshala

கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 77 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி சவூதி அரேபியாவிலிருந்து 52 பேரும் கட்டாரிலிருந்து 25 பேரும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின்னர் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.