கொரோனா அச்சுறுத்தல்: மேலும் 139 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்
In இலங்கை December 26, 2020 4:33 am GMT 0 Comments 1566 by : Yuganthini

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 139 இலங்கையர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (சனிக்கிழமை) வந்தடைந்தனர்.
இதற்கமைய ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 31 பேரும் கட்டாரிலிருந்து 50 பேரும் இந்தியாவிலிருந்து 58 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகைதந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சீனா மற்றும் மாலைத்தீவில் இருந்து மூவர் வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை 599 இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 390 இலங்கையர்களும் மெல்போர்னில் இருந்து 120 பேரும் அவுஸ்ரேலியாவின் சிட்னியில் இருந்து 69 பேரும், 6 பயணிகள் விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர். தற்போது இவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.