வவுனியாவில் முக்கிய பாடசாலைகளுக்கு பூட்டு- அச்சத்தில் மக்கள்
In இலங்கை December 15, 2020 4:40 am GMT 0 Comments 1433 by : Yuganthini

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், அடுத்தடுத்து அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில், வவுனியா நகரில் அமைந்துள்ள முக்கிய பாடசாலைகள் மூடப்பட்டது.
வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை), 7கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் இருவர் வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் பாடசாலை மாணவி ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
இதனையடுத்தே வவுனியா நகரில் அமைந்துள்ள முக்கிய பாடசாலைகளின் கல்விச்செயற்பாடுகள் இன்றுமுதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.