கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற நோயாளி கைது
In இலங்கை January 6, 2021 9:45 am GMT 0 Comments 1569 by : Jeyachandran Vithushan

பொலன்னறுவையில் கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற நோயாளர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரச்சிக்கட்டு , ஆணைவிழுந்தான் பகுதியில் வைத்து 52 வயதான குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கல்லேல்ல கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து ஐவர் அண்மையில் தப்பிச்சென்ற நிலையில் அவர்களில் ஒருவர் மாதம்பை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.
தப்பிச் சென்ற ஏனைய மூவரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.