கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யும் அதிகாரம் ஜனாதிபதியின் ஆலோசகருக்கு!!
In இலங்கை December 22, 2020 2:05 pm GMT 0 Comments 1763 by : Jeyachandran Vithushan

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் செயன்முறையை மேற்கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி முழுமையான ஆய்வுக்குப் பின்னர் தடுப்பூசிகளைக் கொண்டுவர உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை தேவை மற்றும் முன்னுரிமையின் அடிப்படையில் வழங்க தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று பரவும் அபாயமுள்ள தோட்டங்கள், மாடிக்குடியிருப்புக்கள் மற்றும் விடுதிகள் குறித்து தரவுகளை திரட்டவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.