கொரோனா தடுப்பூசி : வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் ஹர்ஷவர்தன்

கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி தொடர்பான மறு ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், நேற்றைய தினம்(சனிக்கிழமை) நாட்டுக்கு மிகவும் முக்கியமான நாள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு முன்வந்த அனைத்து குடிமக்களின் ஒத்துழைப்பும் 10 மாத காலத்திற்குள் நிர்வாகத்திற்கு இரண்டு தடுப்பூசிகள் தயாராக இருப்பதை உறுதி செய்துள்ளன என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.