கொரோனா தனிமைப்படுத்தல் தொடர்பாக பொலிஸார் எச்சரிக்கை – தொடரும் போராட்டம்
In இலங்கை February 3, 2021 7:54 am GMT 0 Comments 1419 by : Jeyachandran Vithushan
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் தொடர்பாக பொலிஸார் எச்சரித்ததை தொடர்ந்தும் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அகிம்சை முறையில் ஆரம்பமாகியுள்ள இந்த கவனயீர்ப்பு போராட்டம் தற்போது பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் தடைகளைத் தாண்டி அக்கரைப்பற்று வரை சென்றுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள், வடக்கு கிழக்கின் நில அபகரிப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு அனைத்து விதமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்க்கும் முகமாகவும் அகிம்சை முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.