கொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் சியம்பலாபே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரும் அதலுகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரும் இவ்வாறு வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.