கொரோனா தொற்றில் இருந்து மேலும் 728 பேர் பூரண குணம்!
In இலங்கை December 3, 2020 9:31 am GMT 0 Comments 1330 by : Dhackshala

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 728 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 410 ஆகப் பதிவாகியுள்ளது.
அவர்களில் 19 ஆயிரத்து 32 பேர் குணமடைந்துள்ள நிலையில், 6 ஆயிரத்து 254 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 124 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.