கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்தது
In இலங்கை December 26, 2020 10:03 am GMT 0 Comments 1247 by : Jeyachandran Vithushan

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 51 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 712 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 782 ஆக காணப்படுகின்றது.
இதில் 7 ஆயிரத்து 545 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 432 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 186 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.