கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 75000 ஐ கடந்தது
In இலங்கை February 14, 2021 12:20 pm GMT 0 Comments 1302 by : Jeyachandran Vithushan

நாட்டில் மேலும் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 75 ஆயிரத்து 209 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 865 பேர் குணமடைந்ததை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 696ஆக அதிகரித்துள்ளது.
தற்போது தொற்று உறுதியானோரில் 6 ஆயிரத்து 123 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 598 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 390 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.