கொரோனா தொற்று – கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான எல்லை மூடப்படுகின்றது!

கொரோனா தொற்று காரணமாக கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உலகின் மிக நீளமான சர்வதேச எல்லை எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை குறைக்க மார்ச் மாதத்தில் எல்லை ஆரம்பத்தில் மூடப்பட்டது.
அதன் பின்னர் மாதந்தோறும் மூடல் புதுப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருள் வர்த்தகம் மற்றும் அவசரகால பயணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்காவிற்கும் மெக்ஸிகோவிற்கும் இடையிலான எல்லையும் ஜனவரி 21 வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.