கொரோனா தொற்று: நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்குகின்றது
In இலங்கை November 24, 2020 10:53 am GMT 0 Comments 1321 by : Jeyachandran Vithushan

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 465 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 508 ஆக காணப்படுகின்றது.
இதில் 5 ஆயிரத்து 456 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 601 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.