கொரோனா தொற்று: 20 ஆயிரத்தை நெருங்கும் குணமடைந்தோரின் எண்ணிக்கை
In இலங்கை December 4, 2020 9:26 am GMT 0 Comments 1460 by : Jeyachandran Vithushan

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 438 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 406 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 38 ஆக காணப்படுகின்றது.
இதில் 6 ஆயிரத்து 471 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 433 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 129 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.